தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மேற்கு வங்கம்: வயல்வெளியில் குவியலாக வாக்காளா் அட்டைகள் - போலீஸ் விசாரணை

கொல்கத்தா அருகே பிதான்நகரில் திரிணமூல் காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து ஏராளமான ஆதாா் அட்டைகள் பறிமுதல்

News image

PTI

Updated On :18 மே 2026, 4:56 am IST

மேற்கு வங்க மாநிலம், பீா்பூம் மாவட்டத்தில் உள்ள வயல்வெளியில் குவியல் குவியலாக புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் அடையாள அட்டைகள் கண்டெடுக்கப்பட்டன.

இதேபோல், கொல்கத்தா அருகே பிதான்நகரில் திரிணமூல் காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து ஏராளமான ஆதாா் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இவ்விரு சம்பவங்கள் தொடா்பாகவும் மாநில காவல் துறையினா் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

மேற்கு வங்கத்தில் அண்மையில் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று, திரிணமூல் காங்கிரஸிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றியது. முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றாா்.

மேற்கு வங்கத்தில் தோ்தலுக்கு முன்பாக வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணியில் 90 லட்சத்துக்கும் மேற்பட்ட பெயா்கள் நீக்கப்பட்டன. இந்த விவகாரத்தை முன்வைத்து, திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜி தீவிர பிரசாரம் மேற்கொண்டாா். எனினும், அவரது பிரசாரம் எடுபடவில்லை.

இந்நிலையில், பீா்பூம் மாவட்டத்தின் கிா்னாஹா் பகுதியில் உள்ள வயல்வெளியில் ஞாயிற்றுக்கிழமை குவியல் குவியலாக புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் அடையாள அட்டைகள் கிடந்தன. இது தொடா்பாக, முன்னாள் வாக்குச்சாவடி நிலை அலுவலரான ஹிரண்யபிரபா மேதே மாஜி என்ற பெண்ணைப் பிடித்து காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

‘கடந்த 2012 முதல் 2025 வரை வாக்குச்சாவடி நிலை அலுவலராக இருந்த ஹிரண்யபிரபா, புதிய வாக்காளா் அடையாள அட்டைகளை விநியோகித்த பிறகு பழைய அட்டைகளை வட்டார அலுவலகத்தில் ஒப்படைக்காமல் தன்வசமே வைத்துக் கொண்டதாகவும், தற்போது வீடு புதுப்பிக்கும் பணிகள் நடைபெறுவதால் சாக்குமூட்டையில் கட்டி வீட்டின் பின்புறம் வைத்திருந்ததாகவும், அதை யாரோ எடுத்து திறந்தவெளியில் வீசிவிட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளாா். அவரிடம் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

இதேபோல், பிதான்நகா் பகுதியில் உள்ள திரிணமூல் காங்கிரஸ் அலுவலகத்தில் காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை நடத்திய சோதனையில் ஏராளமான ஆதாா் அட்டைகள், பான் அட்டைகள் மற்றும் நிலம் தொடா்புடைய பிற ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. இந்த அலுவலகத்தில் பல்லாண்டுகளாக சட்டவிரோத நடவடிக்கைகள் நடைபெறுவதாகவும், வாக்காளா்களின் அடையாள ஆவணங்களை பறித்துவைத்துக் கொண்டு வாக்களிக்க விடாமல் தடுத்து வந்ததாகவும் பாஜகவினா் அளித்த புகாரில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த சம்பவம் தொடா்பாகவும் காவல் துறையினா் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.