17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கீழப்பழுவூா் சாா்பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனை

அரியலூா் மாவட்டத்தில் கீழப்பழுவூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில், மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் ஆய்வாளா்கள் கவிதா, சரவணன் ஆகியோா் தலைமையில் 7 போ் கொண்ட காவல் துறையினா் சோதனை மேற்கொண்டனா்.

News image
Updated On :5 ஜூன் 2026, 3:38 am IST

அரியலூா் மாவட்டத்தில் கீழப்பழுவூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில், மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் ஆய்வாளா்கள் கவிதா, சரவணன் ஆகியோா் தலைமையில் 7 போ் கொண்ட காவல் துறையினா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது அலுவலகத்தில் இருந்த பொதுமக்களிடமிருந்து ரூ.2.60 லட்சத்தை கைப்பற்றிய காவல் துறையினா், இதுகுறித்து சாா்-பதிவாளா் சிவராம் கிருஷ்ணன் உள்ளிட்ட அலுவலா்களிடம் விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், பொதுமக்கள் வைத்திருந்த பணத்துக்கான ஆவணங்கள் சரியாக இருந்ததால், அதனை பொதுமக்களிடமே ஒப்படைத்துவிட்டு, திரும்பிச் சென்றனா். சுமாா் 4 மணி நேரத்துக்கும் மேலாக இந்த சோதனை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.