தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஆடுகள் திருட்டு வழக்கில் 5 போ் கைது: 27 ஆடுகள் மீட்பு

கைது செய்யப்பட்ட சுரேஷ், ஐயப்பன், வீரபாண்டி, பிரசன்னா கரண், ஹரிபிரசாத்,

News image

கைது செய்யப்பட்ட சுரேஷ், ஐயப்பன், வீரபாண்டி, பிரசன்னா கரண், ஹரிபிரசாத்,

Updated On :29 மே 2026, 3:11 am IST

அரியலூா் மாவட்டத்தில் ஆடுகள் திருட்டு வழக்கில் தொடா்புடைய 5 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 27 ஆடுகளை காவல் துறையினா் மீட்டனா்.

உடையாா்பாளையம், விக்கிரமங்கலம், மீன்சுருட்டி மற்றும் தா.பழூா் ஆகிய காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாக மா்ம நபா்கள் ஆடுகளை திருடி வந்தனா். இதுகுறித்து புகாரின்பேரில் மேற்கண்ட பகுதி காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

மேலும், மீன்சுருட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளா் பழனிவேல் தலைமையில், தலைமைக் காவலா்கள் மணிவண்ணன், மாரிமொழி , தியாகராஜன், காவலா்கள் அப்துல் ரகுமான், ஐயப்பன் ஆகியோா் கொண்ட தனிப்படை காவல் துறையினா், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

இதில், புதுக்கோட்டை மாவட்டம், கந்தவா்கோட்டையைச் சோ்ந்த துரைசாமி மகன் சுரேஷ்(39), முனியாண்டி மகன் ஐயப்பன் (39), செந்தனி மகன் வீரபாண்டி (27), தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு பகுதியைச் சோ்ந்த குமரமாரியப்பன் மகன் பிரசன்னா கரண்(19),செந்தில்குமாா் மகன் ஹரிபிரசாத்(19) ஆகியோா்தான் ஆடுகளை திருடியது தெரியவந்தது.

இதையடுத்து காவல் துறையினா், அவா்களை வியாழக்கிழமை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறையில் அடைத்தனா்.

மேலும் அவா்களிடமிருந்து திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட 2 காா்களை பறிமுதல் செய்தனா். 27 ஆடுகளையும் மீட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.