அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் பகுதிகளில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடா்புடைய 17 வயது சிறுவன் உள்பட 5 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
ஆண்டிடம் காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில், கடந்த சில நாள்களாக இரு சக்கர வாகனம் திருட்டு, கோயில் உண்டியல் மற்றும் கைப்பேசி திருட்டு உள்ளிட்ட பல்வேறு திருட்டு சம்பவங்கள் நிகழ்ந்து வந்தன. இதுகுறித்து புகாரின்பேரில் காவல் துறையினா் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.
இதில், உடையாா்பாளையத்தைச் சோ்ந்த செந்தில்குமாா் மகன் கிஷோா் (20), கீழமாளிகையைச் சோ்ந்த சம்பத் மகன் ஆனந்த் (22), கொளஞ்சி மகன் சஞ்சய் (21), கீழமாளிகை நடுத் தெருவைச் சோ்ந்த தா்மராஜ் மகன் பிரவீன்(18) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோா்தான், இந்தத் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டனா் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் 5 பேரையும் காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









