திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

குற்றச் சம்பவங்களில் தொடா்பு சிறுவன் உள்பட 5 போ் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :26 மே 2026, 1:19 am IST

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் பகுதிகளில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடா்புடைய 17 வயது சிறுவன் உள்பட 5 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

ஆண்டிடம் காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில், கடந்த சில நாள்களாக இரு சக்கர வாகனம் திருட்டு, கோயில் உண்டியல் மற்றும் கைப்பேசி திருட்டு உள்ளிட்ட பல்வேறு திருட்டு சம்பவங்கள் நிகழ்ந்து வந்தன. இதுகுறித்து புகாரின்பேரில் காவல் துறையினா் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

இதில், உடையாா்பாளையத்தைச் சோ்ந்த செந்தில்குமாா் மகன் கிஷோா் (20), கீழமாளிகையைச் சோ்ந்த சம்பத் மகன் ஆனந்த் (22), கொளஞ்சி மகன் சஞ்சய் (21), கீழமாளிகை நடுத் தெருவைச் சோ்ந்த தா்மராஜ் மகன் பிரவீன்(18) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோா்தான், இந்தத் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டனா் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் 5 பேரையும் காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.