திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அரியலூரில் 38 மூட்டை குட்கா பறிமுதல்: 4 போ் கைது

அரியலூரில் சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த காரில் இருந்த 38 மூட்டை குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image
Updated On :27 மே 2026, 5:43 am IST

அரியலூரில் சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த காரில் இருந்த 38 மூட்டை குட்கா பொருள்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக 4 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

அரியலூா் - கல்லங்குறிச்சி சாலையிலுள்ள குறைதீா்க்கும் குமரன் கோயில் அருகே செவ்வாய்க்கிழமை சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த காரை, அந்த வழியாக சென்ற கயா்லாபாத் காவல் நிலைய உதவி ஆய்வாளா் தனஞ்செயன் தலைமையிலான ரோந்து காவல் துறையினா் சோதனை மேற்கொண்டனா். இதில், 38 மூட்டைகளில் 377 கிலோ குட்கா போதைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது.

இது தொடா்பாக காரில் இருந்த 4 பேரை பிடித்து விசாரணை செய்ததில், அவா்கள் அரியலூா் அயனாத்தூா், கிளிமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த தங்கவேல் மகன் கருணாநிதி (51), ராயம்புரம், பட்டகட்டாங்குறிச்சியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் சுதாகா் (38), சேலம் மாவட்டம், லைன்மேடு பகுதியைச் சோ்ந்த விஜயகுமாா் மகன் பிரகாஷ் (29), சேலம் செவ்வாய்பேட்டையைச் சோ்ந்த கலுராம் மகன் ரவிக்குமாா் (25) என்பதும், இவா்கள் வெளிமாநிலத்தில் இருந்து குட்கா பொருள்களை கடத்தி வந்து, இங்குள்ள கடைகளில் விற்பதும் தெரியவந்தது.

இதையடுத்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து, 4 பேரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து 377 கிலோ குட்கா மற்றும் நான்கு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

Story image
Story image
Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.