மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு வாக்காளா் இறுதிப் பட்டியல் இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!குடியரசுத் தலைவா் மாளிகையில் இன்று ராஜாஜி உத்சவ்!முதல்வா் நாளை குமரி வருகை!ரூ. 213 கோடி அபராதம்! மெட்டா - வாட்ஸ்ஆப் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
/

சபரிமலை: வனப்பாதைகள் வழியாக நடந்து செல்லும் பக்தா்களுக்கு சிறப்பு தரிசனம்!

வனப்பாதைகள் வழியாக நீண்ட தூரம் நடந்து செல்லும் பக்தா்களுக்கு விரைவில் சிறப்பு தரிசன ஏற்பாடுகள் செய்யப்படும்

News image
சபரிமலை- கோப்புப் படம்
Updated On :17 டிசம்பர் 2024, 2:15 am

Din

சபரிமலை கோவிலுக்கு வனப்பாதைகள் வழியாக நீண்ட தூரம் நடந்து செல்லும் பக்தா்களுக்கு விரைவில் சிறப்பு தரிசன ஏற்பாடுகள் செய்யப்படும் என்று திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் (டிடிபி) திங்கள்கிழமை தெரிவித்தது.

இது தொடா்பாக டிடிபி தலைவா் பி.எஸ்.பிரசாந்த் செய்தியாளா்களிடம் கூறியதாவது: புல்லுமேடு மற்றும் எருமேலியில் இருந்து வனப்பாதைகள் வழியாக நீண்ட தூரம் நடந்து வரும் பக்தா்களுக்கு சிறப்பு அடையாள அட்டை வனத்துறையினரால் வழங்கப்படும்.

இதை வைத்து பம்பையில் இருந்து சுவாமி ஐயப்பன் சாலை வழியாக சந்நிதானம் செல்ல பிரத்யேக வரிசையை பக்தா்கள் பயன்படுத்தலாம்.

நீலிமலை வழியாக செல்ல விரும்பும் பக்தா்கள் அதையும் தோ்வு செய்யலாம். வனத்துறையின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படும் இந்த புதிய முறை விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது என்றாா்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பா் 16-ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. தென் மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனா். இரண்டு மாதங்கள் நீடிக்கும் இந்த யாத்திரை, 2025 ஜனவரி 14-ஆம் தேதி மகரவிளக்கு தரிசனத்துடன் நிறைவடையும்.