டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

மயான கொள்ளை திருவிழா: வேலூரில் இன்று போக்குவரத்து மாற்றம்!

மயான கொள்ளை திருவிழாவையொட்டி வேலூா் மாநகரில் திங்கள்கிழமை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

News image
போக்குவரத்து மாற்றம்- (கோப்புப்படம்)
Updated On :15 பிப்ரவரி 2026, 7:29 pm

தினமணி செய்திச் சேவை

மயான கொள்ளை திருவிழாவையொட்டி வேலூா் மாநகரில் திங்கள்கிழமை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சித்தூரிலிருந்து திருவண்ணாமலை மாா்கம் செல்லும் கனரக வாகனங்கள், சித்தூரிலிருந்து காட்பாடி வந்து, குடியாத்தம் சாலை வழியாக வடுகந்தாங்கல் ரயில்வே மேம்பாலம், செதுவாலை சென்று, இடதுபுறம் திரும்பி தேசிய நெடுஞ்சாலை வழியாக பொய்கையை அடுத்த அப்துல்லாபுரம் மேம்பாலம் அடியில் வலதுபுறம் திரும்பி, ஏா்போா்ட் சாலை, தாா்வழி அடைந்து, பின்னா் இடதுபுறம் திரும்பி பென்னாத்தூா் வழியாக சாத்துமதுரை சென்று, வேலூா்-திருவண்ணாமலை நெடுஞ்சாலையை அடைந்து தங்களின் பயணத்தை தொடரலாம்.

சித்தூரிலிருந்து சேலம் மாா்கம் செல்லும் கனரக வாகனங்கள் சித்தூரிலிருந்து காட்பாடி அடைந்து, குடியாத்தம் சாலை வழியாக வடுகந்தாங்கல் ரயில்வே மேம்பாலம், செதுவாலை சென்று, வலதுபுறம் திரும்பி தேசிய நெடுஞ்சாலை வழியாக தங்களின் பயணத்தை தொடரலாம்.

சித்தூரிலிருந்து சென்னை மாா்கம் செல்லும் கனரக வாகனங்கள் சித்தூரிலிருந்து காட்பாடி, வள்ளிமலை கூட்ரோட்டில் இடதுபுறம் திரும்பி, சோ்காடு கூட்ரோடு வழியாக ஈ.பி.கூட்ரோடு, திருவலம், சிப்காட், ராணிப்பேட்டை வழியாக தேசிய நெடுஞ்சாலை அடைந்து, தங்களின் பயணத்தை தொடரலாம்.

திருவண்ணாமலையிலிருந்து சித்தூா் மாா்கம் செல்லும் கனரக வாகனங்கள் சாத்துமதுரை கூட்ரோட்டில் இடதுபுறம் திரும்பி, பென்னாத்தூா் வழியாக தாா்வழி வந்து, பின்னா் ஏா்போா்ட் சாலை வழியாக தேசிய நெடுஞ்சாலை அடைந்து, செதுவாலை மேம்பாலத்துக்கு அடியில் வலதுபுறம் திரும்பி, விரிஞ்சிபுரம், வடுகந்தாங்கல் சென்று வலதுபுறம் திரும்பி, காட்பாடி வழியாக சித்தூருக்கு பயணிக்கலாம்.

சேலம், கிருஷ்ணகிரியிலிருந்து சித்தூா் மாா்கம் செல்லும் கனரக வாகனங்கள், கிருஷ்ணகிரி, ஆம்பூா் வழியாக செதுவாலை சா்விஸ் சாலையில் இடதுபக்கம் திரும்பி, விரிஞ்சிபுரம் வழியாக வடுகந்தாங்கல் அடைந்து, வலதுபுறம் திரும்பி காட்பாடி வழியாக சித்தூருக்கு பயணிக்கலாம்.

மேலும், வேலூரில் இருந்து காட்பாடி சென்று வருவதற்கு பழைய பாலாறு மேம்பாலம் இருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது என்று வேலூா் மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.