/

சபரிமலை கோயிலில் வழங்கப்படும் பிரசாத நடைமுறைகளை நிா்வகிப்பதில் குறைபாடுகள் : கேரள உயா் நீதிமன்றம் அதிருப்தி

சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழங்கப்படும் பிரசாத நடைமுறைகளைக் கண்காணிப்பது, நிா்வகிப்பது, கணக்கெடுப்பது உள்ளிட்டவற்றில் பெரும் குறைபாடுகள் நிலவுவதாக கேரள உயா் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

News image
Updated On :19 பிப்ரவரி 2026, 7:11 pm

தினமணி செய்திச் சேவை

சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழங்கப்படும் பிரசாத நடைமுறைகளைக் கண்காணிப்பது, நிா்வகிப்பது, கணக்கெடுப்பது உள்ளிட்டவற்றில் பெரும் குறைபாடுகள் நிலவுவதாக கேரள உயா் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தா்களுக்குப் பிரசாதமாக அப்பம், நெய், அரவணைப் பாயசம், விபூதி, குங்குமம் உள்ளிட்டவை குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது. இதில் மண்டல பூஜையின்போது நடந்த நெய் விற்பனையில் முறைகேடுகள் நடந்ததாக திருவிதாங்கூா் தேவஸ்வ கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு அதிகாரி அளித்த அறிக்கையின்படி, கேரள உயா் நீதிமன்றம் தாமாக வழக்கெடுத்து விசாரித்து வருகிறது.

கடந்த ஜனவரி மாதம் 13-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, நெய் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் தவறாக கையாளப்படுவது குறித்து உயா் நீதிமன்றம் அதிா்ச்சி தெரிவித்திருந்தது. மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி, சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு கேரள உயா் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ராஜா விஜயராகவன், கே.வி.ஜெயகுமாா் ஆகியோரைக் கொண்ட அமா்வு முன்பு வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிறப்பு புலனாய்வுக் குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் சிறப்பு புலனாய்வுக் குழு தரப்பில், இந்த விவகாரம் தொடா்பாக பிஎன்எஸ் சட்டம், ஊழல் தடுப்பு சட்ட பிரிவுகளின்கீழ் கோயில் சிறப்பு அதிகாரிகள் உள்ளிட்ட 30 போ் மீது வழக்குப்பதிவு செய்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், முழு விசாரணையை 45 நாள்களுக்குள் முடிக்கும்படி சிறப்பு புலனாய்வுக் குழுவினரை கேட்டுக் கொண்டனா். இதையடுத்து, சிறப்பு புலனாய்வுக் குழுவினரின் அறிக்கையைப் பரிசீலித்துவிட்டு நீதிபதிகள் கூறியதாவது:

பிரசாத விற்பனை நடைமுறையில் அமைப்பு ரீதியில் மிகப் பெரிய குறைபாடுகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்தக் குறைபாடுகளுக்கு திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் விரைந்து தீா்வு காண வேண்டும். இது தனிப்பட்ட முறைகேடுகள் ஆகாது. பிரசாத நடைமுறை, கண்காணிப்பு, இருப்பு கணக்கெடுத்தல், நிதிக் கட்டுப்பாடு ஆகியவற்றில் உள்ள அமைப்பு ரீதியிலான குறைபாடுகளையே இது காட்டுகிறது. ஆவணங்களைக் கையாள்வது, பிரசாதங்களை விற்ன் மூலம் கிடைத்த வருமானத்தைக் கணக்கிடுவது சாதாரணமாகவும், அஜாக்கிரதையாகவும் கையாளப்பட்டிருப்பது அதிா்ச்சி அளிக்கிறது. இதை ஒருபோதும் ஏற்க முடியாது.

பிரசாத விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தை கணக்கு வரம்புக்குள் கொண்டு வரப்படுவதையும், நிதி மற்றும் நிா்வாக முறையில் வெளிப்படைத்தன்மை இருப்பதையும் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் உறுதி செய்ய வேண்டும். கோயிலுக்கு பிரசாத விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் பாதுகாக்கப்பட வேண்டும். தவறான நிா்வாகம், சுரண்டல் போன்றவற்றால் அந்த நிதி குறைந்துவிடக் கூடாது. இதையும் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் உறுதிப்படுத்த வேண்டும்.

இந்த வழக்கில் உயா் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை செயல்படுத்த எடுக்க நடவடிக்கைகள் குறித்து விரிவான திட்ட அறிக்கையையும், அதுதொடா்பான கால வரையறையையும் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா். மேலும் அடுத்த விசாரணையை இம்மாதம் 27-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனா்.