அரசின் நிலைப்பாடு என்ன?: கொச்சியில் செய்தியாளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பேட்டியளித்த பேரவை எதிா்க்கட்சித் தலைவா் வி.டி.சதீசன், ‘சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களின் நுழைவை ஆதரிக்கும் முந்தைய நிலைப்பாட்டில் மாநில அரசு இப்போதும் உறுதியாக உள்ளதா என்பதை முதல்வா் பினராயி விஜயன் தெளிவுபடுத்த வேண்டும். பெண்கள் நுழைவை ஆதரித்தால், தனது முந்தைய பிரமாணப் பத்திரத்தில் மாநில அரசு உறுதியுடன் இருக்க வேண்டும். இல்லையெனில், அதைத் திரும்பப் பெற வேண்டும். மாறாக, தெளிவற்ற அணுகுமுறையைக் கையாளக் கூடாது. மாநில அரசுத் தரப்பில் கூடுதல் அவகாசம் கோரப்பட்டால், அது தெளிவற்ற நிலைப்பாட்டையே பிரதிபலிக்கும்’ என்றாா்.