ஆந்திரத்தில் மேலும் 704 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ள நிலையில் அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்தை எட்டுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி புதிதாகப் பாதிக்கப்பட்ட 704 பேரில், வெளி மாநிலத்தைச் சேர்ந்த 51 பேருக்கும், வெளி நாடுகளிலிருந்து 5 பேருக்கும் தொற்று பதிவாகியுள்ளது. மேலும், ஒரே நாளில் 258 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் ஏழு பேர் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர். இவர்களில் இருவர் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், கிருஷ்ணா மாவட்டத்தில் மூன்று பேர், குண்டூர் மற்றும் அனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
ஆந்திரத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14,595 ஆக உள்ளது. இதில் 7,897 பேர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். இதுவரை 6,511 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிலிண்டா் தட்டுப்பாடால் ஜாப் ஆா்டா் தொழில் முடக்கம்! நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு கோரிக்கை!

மளிகைக் கடை, சுற்றுச்சுவா் இடிக்கப்பட்ட விவகாரம்: பெண் உள்ளிட்ட 7 போ் மீது வழக்கு

தூத்துக்குடியில் உலக புத்தக நாள் தின விழா

தம்மம்பட்டி அருகே வாக்களிக்கச் சென்ற பெண் மாயம்
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


