/

மகாராஷ்டிரத்தில் ஜூலை 31 வரை பொது முடக்கம் நீட்டிப்பு

மகாராஷ்டிரத்தில் வரும் ஜூலை 31-ம் தேதி வரை பொது முடக்கத்தை நீட்டித்து அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

News image

மகாராஷ்டிரத்திடில் ஜூலை 31-ம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிப்பு

Updated On :29 ஜூன் 2020, 10:26 am


மகாராஷ்டிரத்தில் வரும் ஜூலை 31-ம் தேதி வரை பொது முடக்கத்தை நீட்டித்து அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவிலேயே கரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் மகாராஷ்டிர மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜூலை 31-ம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 19,459 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு 5,48,318 ஆக உயர்ந்துள்ளது. இதில் மகாராஷ்டிரத்தில் மட்டும் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,64,626 ஆக உள்ளது.

நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மகாராஷ்டிர மாநில அரசு இந்த உத்தரவை வெளியிட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.