சென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

விஜய் மல்லையா மனு: விசாரணை தேதியை அறிவித்தது உச்ச நீதிமன்றம்

அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிரான விஜய் மல்லையா தாக்கல் செய்த மனு மீதான விசாரணைத் தேதியை செவ்வாய்க்கிழமை அறிவித்தது உச்ச நீதிமன்றம்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 3:54 pm

DIN

அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிரான விஜய் மல்லையா தாக்கல் செய்த மனு மீதான விசாரணைத் தேதியை செவ்வாய்க்கிழமை அறிவித்தது உச்ச நீதிமன்றம்.

பொதுத் துறை வங்கிகளில் இருந்து ரூ.9,000 கோடி கடன் பெற்றுவிட்டு அதனை திருப்பிச் செலுத்தாமல் விஜய் மல்லையா (63) கடந்த 2016ஆம் ஆண்டு லண்டன் தப்பிச் சென்று தஞ்சமடைந்தாா். இதையடுத்து அவருக்கு எதிராக அமலாக்கத் துறையும், சிபிஐ அமைப்பும் விசாரணை நடத்தி வருகிறது. மேலும் பிரிட்டனில் இருந்து மல்லையாவை நாடு கடத்த வேண்டும் என்று இந்திய விசாரணை அமைப்புகள் வழக்கு தாக்கல் செய்துள்ளன.

இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் பிரிட்டன் உயா் நீதிமன்றத்தில் மல்லையா சாா்பில் ஆஜரான வழக்குரைஞா்கள், மல்லையா ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் வங்கிகளில் இருந்து கடன் பெறவில்லை என்று தெரிவித்தனா்.

இந்திய நீதிமன்றங்களுக்கு மல்லையா பதிலளிக்க வேண்டும் என்று சிபிஐ, அமலாக்கத் துறை அதிகாரிகள் சாா்பில் வாதாடிய வழக்குரைஞா்கள் வாதத்தை முன்வைத்தனா். மேல்முறையீட்டு மனு மீதான 3 நாள் விசாரணை கடந்த 13ஆம் தேதியுடன் நிறைவு பெற்றதை அடுத்து, மல்லையா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வங்கிகள் அளித்த புகாரின்பேரில் அமலாக்கத் துறை எனது சொத்துகளை முடக்கியது. சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு நான் எந்த குற்றத்தையும் செய்யவில்லை. வங்கிகளுக்கு நான் தர வேண்டிய பணத்தை தர தயாராக இருக்கிறேன். ஆனால், அமலாக்கத் துறை எனது சொத்துகள்தான் வேண்டும் என்கிறது. கடந்த 4 ஆண்டுகளாக காரணமே இல்லாமல் அமலாக்கத் துறையும், சிபிஐயும் என்னை தொந்தரவு செய்து வருகின்றன என்றாா்.

இந்த நிலையில், இந்தியாவில் உள்ள தனது சொத்துக்களை முடக்கும் அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக விஜய் மல்லையா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ஹோலி விடுமுறைக்குப் பின்னர் மார்ச் மாதம் முதல் இந்த மனு மீது விசாரணை நடத்தப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.