சென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தலில் வன்முறை: விடியோ மற்றும் புகைப்படங்கள்

வாக்குப்பதிவின் போது திரிணாமுல் காங்கிரஸ், பாஜக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது

News image
Updated On :30 ஜனவரி 2024, 1:02 pm

Raghavendran

மேற்கு வங்க மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தல் திங்கள்கிழமை நடைபெறுகிறது. இது 3 கட்டங்களாக நடைபெறவுள்ளது. மாநில தேர்தல் ஆணையம் அளித்துள்ள தகவலின்படி, 621 மாவட்ட கவுன்சில்கள், 6,157 பஞ்சாயத்து பிளாக்குகள், 20 மாவட்டங்களில் உள்ள 31,827 கிராம பஞ்சாயத்துகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. 

இதன் வாக்குப் பதிவு திங்கள்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் காலை 11 மணி நிலவரப்படி 26.28 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில், வாக்குப்பதிவின் போது திரிணாமுல் காங்கிரஸ், பாஜக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சதான்பூரில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சில் 20 பேர் பலத்த காயமடைந்தனர்.

முரிசிதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் இருந்து வாக்குச்சீட்டுகள் மற்றும் வாக்குப்பெட்டிகள் கைப்பற்றப்பட்டு அருகிலிருந்த குளங்களில் வீசப்பட்டுள்ளது. இதனால் அங்கு தற்காலிகமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. 

பர்கானாஸ் மாவட்டத்தில் நடந்த வன்முறையில் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் ஆரிஃப் காசி சுட்டுக் கொல்லப்பட்டார். பிர்பாரா வாக்குச்சாவடியில் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்களால் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 5 பத்திரிகையாளர்கள் படுகாயமைடந்தனர்.

Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.