சென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

'தலித் முதல்வர்'- மூத்த தலைவர் எனும் முறையில் நான் தயார்: மல்லிகார்ஜுன கார்கே

கர்நாடகத்தில் தலித் முதல்வர் தேர்ந்தெடுக்கப்பட்டால் மூத்த தலைவர் எனும் முறையில் தயாராக இருப்பதாக மல்லிகார்ஜுன கார்கே திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 1:02 pm

Raghavendran

கர்நாடகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், மே 15-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதையடுத்து அடுத்து ஆட்சி அமைப்பது தொடர்பாக காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. 

இந்நிலையில், காங்கிரஸ் 2-ஆவது முறையாக தொடர்ந்து ஆட்சியமைத்தால் தலித் முதல்வரை தேர்ந்தெடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்காரணமாகவே சித்தராமையா தனது கருத்தை வெளிப்படுத்தியதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்து தலித் முதல்வராக அறிவிக்கப்பட்டால் மூத்த தலைவர் எனும் முறையில் தயாராக இருப்பதாக மல்லிகார்ஜுன கார்கே திங்கள்கிழமை தெரிவித்துள்ளார். இதுகுறித்து காலாபுராகியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது அவர் மேலும் கூறியதாவது:

நான் தலித் என்ற முறையில் எனக்கு எந்த பதவி வழங்கப்பட்டாலும் அதை நான் ஏற்க மாட்டேன். கட்சியில் ஒரு மூத்த தலைவர் என்னும் முறையில் முதல்வர் பதவி அளித்தால் அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வேன். அரசியலில் எனக்கு ஓய்வு இல்லை. கட்சி அனுமதித்தால் அடுத்த தேர்தல்களிலும் போட்டியிடுவேன். எனக்கும், சித்தராமையாவுக்கும் இடையில் ஊடகம் தான் வேண்டுமென்றே பிரச்னையை ஏற்படுத்துகிறது. இவ்விவகாரத்தில் மேலிடத்தின் முடிவுக்கு நாங்கள் இருவரும் கட்டுப்பட்டுள்ளோம். இது இன்னும் 12 மணிநேரங்களில் தெரிந்துவிடும் என்றார். 

முன்னதாக, 'கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும். எனினும், நடந்து முடிந்த கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல்தான் நான் போட்டியிட்ட கடைசித் தேர்தலாகும். தலித் தலைவர் ஒருவர், முதல்வராக்கப்படுவாரா? எனக் கேட்கிறீர்கள். தலித் சமூகத்தைச் சேர்ந்தவரை முதல்வராக்குவது என்று கட்சி முடிவு செய்தால் அதில் எனக்கு ஆட்சேபமில்லை' என்று சித்தராமையா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.