தற்போதைக்கு ஏற்றுக்கொள்ளும், மறுக்கும் நிலையில் இல்லை: தேவே கௌடா
தற்போதைய சூழ்நிலையில் எதையும் ஏற்றுக்கொள்ளும், மறுக்கும் நிலையில் இல்லை என ஜேடிஎஸ் கட்சித் தலைவர் தேவே கௌடா ஞாயிற்றுக்கிழமைதெரிவித்துள்ளார்.


தற்போதைய சூழ்நிலையில் எதையும் ஏற்றுக்கொள்ளும், மறுக்கும் நிலையில் இல்லை என ஜேடிஎஸ் கட்சித் தலைவர் தேவே கௌடா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் 222 தொகுதிகளுக்கான சட்டப் பேரவைத் தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. இதையடுத்து வெளியிடப்பட்டு வரும் கருத்துக்கணிப்புகளில் பல்வேறு முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. இருப்பினும் அடுத்த ஆட்சி அமைப்பதில் ஜேடிஎஸ் முக்கியப் பங்கு வகிக்கும் என்று இவற்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜேடிஎஸ் கட்சித் தலைவர் தேவே கௌடா, செய்தியாளர்களை ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
தற்போதைய சூழ்நிலையில் நான் எதையும் ஏற்றுக்கொள்ளும், மறுக்கும் நிலையில் இல்லை. எதுவாக இருந்தாலும் மே 15-ஆம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கை வரை காத்திருக்க வேண்டும். அப்போதுதான் உண்மை நிலை தெரிய வரும்.
கர்நாடகாவில் அடுத்த அமையப்போகும் ஆட்சி அமைக்க நாங்கள் முக்கியப் பங்கு வகிப்போம் என்னும் நம்பிக்கை எனக்கு உள்ளது. அதுபோன்ற வாய்ப்பு கிடைத்தால் அதை சிறப்பாகச் செய்வோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...