பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்: எடியூரப்பா திட்டவட்டம்
கர்நாடகாவில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா திட்டவட்டமாக தெரிவித்தார்.


கர்நாடகாவில் 222 தொகுதிகளுக்கான சட்டப் பேரவைத் தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமையும் என அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை நான் பார்த்தேன். அதில் பாஜக 125 முதல் 130 இடங்கள் வரை வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியால் 70 இடங்களில் கூட வெல்ல முடியாது. ஜேடிஎஸ் 25 இடங்கள் வரை வெற்ற பெறலாம்.
இங்கு பாஜக-வுக்கு ஆதரவாக அமைதியான மற்றும் அதிக சக்தியுடன் கூடிய வல்லமை ஏற்பட்டுள்ளது. இது காங்கிரஸ் மற்றும் சித்தராமையாவுக்கு எதிராக ஏற்பட்டுள்ள அதிருப்தி மற்றும் கோபத்தின் வெளிப்பாடு ஆகும். இது வருகிற மே 15-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது தெரியவரும். அதோடு கர்நாடகாவில் இருந்து காங்கிரஸ் தூக்கி ஏறியப்படும்.
இதை நான் மட்டும் கூறவில்லை. இந்த தேர்தலில் தோற்றுவிடுவோம் என்பதை காங்கிரஸும் நன்கு அறியும். கர்நாடகாவில் தொங்கு சட்டப் பேரவை அமையுமா என்ற கேள்விக்கு இங்கே இடமில்லை. பாஜக-வின் ஆட்சி தான் அமையும் என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்கிறேன்.
கர்நாடக தேர்தல் நிலவரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், என்னுடனும், பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா அவர்களுடனும் தொடர்ந்து ஆலோசித்து வருகிறார். இங்கு வெற்றிபெறுவோம் என்பதில் நாங்கள் அனைவருமே நம்பிக்கையுடன் உள்ளோம். மே 17-ல் கண்டிப்பாக பாஜக ஆட்சி அமைக்கப்போவது 100 சதவீதம் உறுதி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...