கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறும் வரை அவைகளை முடக்காதீர்: ஜெகன் மோகன் கோரிக்கை

மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறும் வரை இரு அவைகளையும் முடக்க வேண்டாம் என்று ஜெகன் மோகன் ரெட்டி கோரிக்கை வைத்துள்ளார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:31 pm

Raghavendran

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து விவகாரம் வழங்குவது தொடர்பாக அம்மாநில கட்சிகளின் தரப்பில் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது. இதில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதாக ஆந்திராவைச் சேர்ந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்தார்.

மேலும் மத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். அக்கட்சித் தரப்பிலும் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றத்தை தொடர்ந்து முடக்கி வருகின்றன. இதுகுறித்து ஜெகன் மோகன் ரெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:

சிறப்பு அந்தஸ்து மட்டுமே ஆந்திராவுக்கு மறுவாழ்வு அளிக்கும். எனவே நாங்கள் தாக்கல் செய்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான நடவடிக்கையை தொடர்ந்து செயல்படுத்த இதர கட்சிகள் அனைத்தும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். உங்கள் அனைவரின் கோரிக்கையும் நியாயமானது.

இருப்பினும் இந்த தீர்மானம் நிறைவேறும் வரை இரு அவைகளையும் முடக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்விவகாரத்தில் இருந்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி பின்வாங்கப்போவதில்லை. எனவே இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான நடவடிக்கையை சபாநாயகர் பரிசீலனைச் செய்ய வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.