கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

மம்தா பானர்ஜி, சந்திரசேகர ராவ் சந்திப்பு: 3-ஆது அணி அமைக்க திட்டம்

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் திங்கள்கிழமை சந்தித்தனர். 

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:31 pm

Raghavendran

தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சித் தலைவரும் தெலுங்கானா மாநில முதல்வருமான சந்திரசேகர ராவ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜியுடன் திங்கள்கிழமை சந்தித்தார்.

தேசிய அளவில் பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத 3-ஆவது அணி அமைப்பது தொடர்பாக இவ்விரு தலைவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், தற்போது இதுதொடர்பாக நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். 

3-ஆவது அணி அமைப்பது தொடர்பாக இவர்கள் ஏற்கனவே தெரிவித்துள்ள கருத்துக்கு பிற மாநிலங்களைச் சேர்ந்த பல கட்சிகள் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றன. இதையடுத்து இவர்கள் இருவரும் 3-ஆவது அணி அமைப்பது தொடர்பான தங்கள் நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகின்றனர். 

நாங்கள் இருவரும் சந்தித்திருப்பதி ஒரு புதிய அத்தியாத்தின் தொடக்கம் மட்டும்தான் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார். அதுபோல பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சிறப்பான ஆட்சியைத் தர தவறிவிட்டன. எனவே இனிவரும் காலத்தில் மக்களாட்சி அமையும் என சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் ஆண்டு விழா வருகிற ஏப்ரலில் கொண்டாடப்படவுள்ள வேளையில், 3-ஆவது அணி தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், மத்திய அரசுக்கு எதிராக ஆந்திராவைச் சேர்ந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர தொடர்ந்து முனைப்பு காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.