கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

அவதூறு வழக்குகளின் எதிரொலி: நிதின் கட்கரி, கபில் சிபலிடம் கேஜரிவால் மன்னிப்பு

அவதூறு வழக்குகள் தொடரப்பட்டதன் எதிரொலியாக பிக்ரம் மஜிதியாவைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் கபில் சிபல் ஆகியோரிடம் அரவிந்த் கேஜரிவால் மன்னிப்பு கேட்டார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:31 pm

Raghavendran

ஆம்ஆத்மி கட்சித் தலைவரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் மீது அடுத்தடுத்து அவதூறு வழக்குகள் பதியப்பட்டன. இதையடுத்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல் ஆகியோரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.

ஆம்ஆத்மி கட்சி சமீபத்தில் இந்தியாவின் ஊழல்வாதிகள் என்ற ஒரு பட்டியலை வெளியிட்டது. அதில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் தனியார் நிறுவனத்திடம் இருந்து தொலைதொடர்புத்துறை வரி விலக்கு அளிப்பது தொடர்பாக லஞ்சம் கேட்டதாக முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல் மற்றும் அவரது மகன் அமித் சிபல் ஆகியோரது பெயர் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில், தங்கள் மீது தேவையற்ற ஆதராமில்லாத குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகக் கூறி நிதின் கட்கரி மற்றும் கபில் சிபல் மகன் அமித் சிபல் ஆகியோர் தனித்தனியே அவதூறு வழக்குகளைத் தொடர்ந்தனர்.

இதையடுத்து, அரவிந்த் கேஜரிவால் பகிரங்க மன்னிப்பு கேட்டும், தனிப்பட்ட முறையில் எவ்வித கோபமும் இல்லை எனவும் நிதின் கட்கரிக்கு கடிதம் எழுதினார். இதனைத் தொடர்ந்து இருவரும் நேரில் சென்று அவதூறு வழக்கினைத் திரும்பப்பெற்றனர். அதுபோல கபில் சிபல் மற்றும் அவரது மகன் அமித் சிபல் ஆகியோரிடமும் மன்னிப்பு கோரினார்.

முன்னதாக, போதை பொருட்களைக் கடத்தி வியாபாரம் செய்வதாகக் கூறி பஞ்சாப்பைச் சேர்ந்த அகாலிதளத் தலைவர் பிக்ரம் மஜிதியா மீது அரவிந்த் கேஜரிவால் குற்றம்சாட்டினார். இதன்காரணமாக, பஞ்சாப் ஆம்ஆத்மி கட்சி கேஜரிவாலுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியது. அதன் முக்கியத் தலைவர்கள் விலகினர். பின்னர், பிக்ரமிடம் கேஜரிவால் மன்னிப்புக் கேட்பதாகக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.