சென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

ஆந்திர மக்கள் மீது எங்களுக்கு அதிக அக்கறை உண்டு: பாஜக தேசியச் செயலாளர் ராம் மாதவ்

கடந்த 4 ஆண்டுகளாக ஆந்திர மக்களுக்குச் செய்துள்ள நன்மைகளை அவர்களிடம் கூறப்போவதாக பாஜக தேசியச் செயலாளர் ராம் மாதவ் சனிக்கிழமை தெரிவித்தார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:30 pm

Raghavendran

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பாக கடந்த சில நாட்களாக பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. முதலாவதாக தன்னை சந்திக்கவும், பேசவும் பிரதமர் நரேந்திர மோடி மறுப்பதாகக் கூறி தெலுங்கு தேசம் உறுப்பினர்கள் மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாக அக்கட்சித் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு அறிவித்தார். பின்னர் ஆந்திர அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பாஜக அமைச்சர்களும் ராஜிநாமா செய்தனர்.

பின்னர் மத்திய அரசின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார். இதையடுத்து ஆந்திராவின் எதிர்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. இதையடுத்து தெலுங்கு தேசம் கட்சியும் அதே நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. 

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தேசியச் செயலாளர் ராம் மாதவ் பேசியதாவது:

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு எழுப்பியுள்ள சர்ச்சைக்கு பதிலடி தரும் விதமாக ஆந்திராவின் தற்போதைய நிலை குறித்த தீர்மானத்தை நாங்கள் தாக்கல் செய்யவுள்ளோம். மற்ற கட்சிகளை விட ஆந்திர மக்களின் வளர்ச்சி மீது பாஜக-வுக்கு தான் அதிக ஈடுபாடு உண்டு.

கடந்த 4 ஆண்டுகளாக ஆந்திர மாநிலத்தின் வளர்ச்சிக்கு மத்திய பாஜக அரசு பல்வேறு உதவிகளையும், நலத்திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஆந்திர மக்களிடம் பாஜக நேரில் சென்று விளக்கமளிக்கும். ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதை விட பன்மடங்கு நன்மைகளை செயல்படுத்த மத்திய அரசு தயாராக உள்ளது. 

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தெலுங்கு தேசம் மீண்டும் இடம்பெறுமா என்பது குறித்து சந்திரபாபு நாயுடுவிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும் என்று செய்தியாளர்களை நோக்கி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.