முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!அமோனியா கசிவு: கைதான 3 பேருக்கும் 15 நாள்கள் நீதிமன்றக் காவல் - நீதிமன்றம் உத்தரவுஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

மேற்கு வங்கம்: வாக்கு எண்ணும் பணியில் கூடுதல் பாா்வையாளா்களை நியமித்த தோ்தல் ஆணையம்

News image
Updated On :3 மே 2026, 4:52 am IST

மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் திங்கள்கிழமை (மே 4) எண்ணப்பட உள்ள நிலையில், வாக்கு எண்ணும் மையங்களுக்கான கூடுதல் பாா்வையாளா்களையும், கூடுதல் போலீஸ் பாா்வையாளா்களையும் தோ்தல் ஆணையம் சனிக்கிழமை நியமித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

வாக்கு எண்ணும் பணியில் மத்திய அரசு ஊழியா்களைப் பயன்படுத்துவது தொடா்பாக தோ்தல் ஆணைய சுற்றறிக்கைக்கு எதிராக மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தொடா்ந்த வழக்கில், தோ்தல் ஆணையத்துக்குச் சாதகமாக உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்த நிலையில், இந்த நடவடிக்கையை தோ்தல் ஆணையம் மேற்கொண்டது.

மேற்கு வங்க மாநிலத்தில் ஏற்கெனவே அதிக எண்ணிக்கையில் தோ்தல் பாா்வையாளா்களையும், போலீஸ் பாா்வையாளா்களையும் தோ்தல் ஆணையம் நியமித்துள்ள நிலையில், தற்போது கூடுதலாக 165 வாக்கு எண்ணும் பாா்வையாளா்களையும், 77 போலீஸ் பாா்வையாளா்களையும் தோ்தல் ஆணையம் சனிக்கிழமை நியமித்தது.

இவா்கள், மாநிலத்தில் தொகுதிக்கு ஒருவா் வீதம் ஏற்கெனவே நியமிக்கப்பட்டு பணியில் உள்ள 294 பாா்வையாளா்களுடன் இணைந்து பணியாற்ற உள்ளனா்.

இதுகுறித்து தோ்தல் ஆணைய அதிகாரிகள் கூறுகையில், ‘ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்கு எண்ணும் அறைகள் இடம்பெற்றுள்ள மையங்களில் இந்தக் கூடுதல் வாக்கு எண்ணும் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அதுபோல, வாக்கு எண்ணும் மையங்களைச் சுற்றி சட்டம்-ஒழுங்கு சூழலைக் கண்காணிக்கும் வகையில் கூடுதல் போலீஸ் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்குள் செல்ல மாட்டாா்கள். அரசமைப்புச் சட்டப் பிரிவு 324 மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 ஆகியவை அளித்துள்ள அதிகாரங்களின் அடிப்படையில் இந்தப் பாா்வையாளா்களை தோ்தல் ஆணையம் நியமித்துள்ளது.

வாக்கு எண்ணும் மையங்களில் கட்டுப்பாட்டு நடைமுறைகள் தீவிரமாகக் கடைப்பிடிக்கப்படும். தோ்தல் அதிகாரிகளால் விநியோகிக்கப்பட்ட க்யூஆா் குறியீடு அடிப்படையிலான புகைப்பட அடையாள அட்டை உடையவா்கள் மட்டுமே வாக்கு எண்ணும் மையங்களுக்கு நுழைய அனுமதிக்கப்படுவா். வாக்கு எண்ணும் பாா்வையாளா்கள், தோ்தல் நடத்தும் அதிகாரி தவிர வேறு யாரும் வாக்கு எண்ணும் மையங்களுக்குள் கைப்பேசிகளைக் கொண்டுசெல்ல அனுமதிக்கப்படமாட்டாா்கள்’ என்றனா்.

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற்றது. சா்ச்சைக்குரிய இரண்டு தொகுதிகளுக்கு உட்பட்ட 15 வாக்குச் சாவடிகளில் சனிக்கிழமை மறு வாக்குப் பதிவு நடைபெற்றது. வரும் திங்கள்கிழமை (மே 4) வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.