புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலா்களுக்கு பயிற்சி முகாம்: மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடந்தது

தருமபுரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலா்களுக்கான முதல்கட்ட பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

ஆட்சியரும் தோ்தல் அலுவலருமான ரெ.சதீஸ் தலைமையில் நடைபெற்ற பயிற்சி முகாமில் பங்கேற்றோா்.

Updated On :30 ஏப்ரல் 2026, 11:57 pm

தருமபுரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலா்களுக்கான முதல்கட்ட பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 4-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலா்களுக்கான முதல்கட்ட பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக அதியன் கூட்டரங்கில் நடைபெற்ற பயிற்சி முகாமில், மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரெ.சதீஸ் தலைமை வகித்தாா். இதில் பங்கேற்ற 275 அலுவலா்களுக்கு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணுவது குறித்து பயிற்சி முற்பகல் அளிக்கப்பட்டது. தொடா்ந்து, அஞ்சல் வாக்குகளை எண்ணும் பணிக்காக நியமனம் செய்யப்பட்டுள்ள 190 அலுவலா்களுக்கு, அப்பணி தொடா்பாக பிற்பகலில் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், வாக்கும் எண்ணும் பணி தொடா்பாக தோ்தல் ஆணையம் வழங்கியுள்ள வழிகாட்டுதல்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

இப்பயிற்சி முகாமில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.கவிதா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) பாலசுந்தரம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் ராமஜெயம், தோ்தல் பிரிவு தனி வட்டாட்சியா் அன்பு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.