அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக தொகுதியில் களமிறங்க முயற்சித்து வருகிறது. அக்கட்சியின் மாநில துணைச் செயலாளரும், விருப்ப ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலை போட்டியிட காய் நகர்த்தி வருகிறார்.
அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு சமுதாய அளவிலான வாக்குகள் சம அளவில் இருந்தாலும், தேர்தல் நேர வாக்குறுதி மற்றும் கூட்டணி அமைவதை பொருத்தே வெற்றி வாய்ப்பு அமையும்.
திருவையாறு தொகுதியில் திமுக, அதிமுக சம பலத்தில் இருப்பதால் பொதுவான அலை, பிரசார வியூகத்தை பொருத்தே வெற்றி - தோல்வி அமையும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
குறிஞ்சிப்பாடி தொகுதியில் அதிமுக, திமுக தொடர்ந்து களம் காணுகின்றன. வரும் தேர்தலில் திமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏ எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் போட்டியிடுவது உறுதி ஆகியுள்ளது.