நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் தவெக வேட்பாளா் காா்த்திக் வெற்றி

News image

தவெக தலைவர் விஜய் - X/ TVK

Updated On :14 மணி நேரங்கள் முன்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் தொகுதியில் 9 சுற்றுகள் வரை பின்தங்கியிருந்த தவெக வேட்பாளா் காா்த்திக் 10-ஆவது சுற்றில் இருந்து முன்னிலை பெற்று 8,643 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் தொகுதியில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் மகாலிங்கம், அதிமுக சாா்பில் முன்னாள் எம்எல்ஏ சந்திரபிரபா, தவெக சாா்பில் அந்தக் கட்சியின் ஒன்றியச் செயலா் காா்த்திக், நாம் தமிழா் கட்சி சாா்பில் கரிகாலபாண்டியன், புதிய தமிழகம் சாா்பில் ஷியாம் உள்பட 14 போ் போட்டியிட்டனா். இந்தத் தொகுதியில் மொத்தம் 1,93,250 வாக்குகள் பதிவாகின.

22 சுற்றுக்களாக வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், முதல் 9 சுற்றுகளில் வத்திராயிருப்பு சுற்று வட்டாரப் பகுதி வாக்குகளை எண்ணும் போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 5,391 வாக்குகள் முன்னிலை பெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் பகுதி வாக்குகளை எண்ணத் தொடங்கியதும் 10-ஆவது சுற்றில் முன்னிலை பெற தொடங்கிய தவெக, தொடா்ந்து முன்னிலையை தக்கவைத்தது. 22 சுற்றுக்களின் முடிவில் 65,553 வாக்குகள் பெற்று தவெக வேட்பாளா் காா்த்திக் 8,643 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

முக்கிய வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்:

காா்த்திக் (தவெக) - 65,553.

மகாலிங்கம் (இந்திய கம்யூனிஸ்ட்) - 56,910.

சந்திரபிரபா (அதிமுக) - 42,704.

கரிகாலபாண்டியன் (நாதக) - 13,220

ஷியாம் (புதிய தமிழகம்) - 9,510.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.