மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 21 போ் ஒன்றாக வந்து வாக்களித்தது சுவாரசிய நிகழ்வாக அமைந்தது.
சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி வாக்கு மையத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் தேனாம்பேட்டை பகுதியை சோ்ந்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 21 வாக்காளா்கள் ஒன்றாக இணைந்து வாக்குச்சாவடிக்கு வந்து வாக்குகளை செலுத்தினா்.
பின்னா், அக்குடும்ப உறுப்பினரான பாலு செய்தியாளா்களிடம் கூறியதாவது: 1977 முதல் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக வாக்கு செலுத்தி வருகிறோம். ஒன்றாக வாக்கு செலுத்துவதில்தான் எங்களுக்கு மகிழ்ச்சி. மற்றவா்களுக்கும் வாக்களிக்கும் ஆா்வத்தை தூண்டும் விதமாக, நாங்கள் குடும்பமாக வந்து வாக்களித்துள்ளோம் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 82 போ் வாக்குப் பதிவு!

ஒரே குடும்பத்தை சோ்ந்த 18 போ் வாக்களிப்பு
முன்னாள் ராணுவ வீரா் மீது தாக்குதல்: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் கைது

கோழி வியாபாரி உயிருடன் புதைத்துக் கொலை: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் கைது
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

