மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

முன்னாள் ராணுவ வீரா் மீது தாக்குதல்: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் கைது

மகாராஜகடை அருகே முன்னாள் ராணுவ வீரரை தாக்கியதாக, ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :4 ஏப்ரல் 2026, 7:49 pm

மகாராஜகடை அருகே முன்னாள் ராணுவ வீரரை தாக்கியதாக, ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜகடை அருகே உள்ள கம்மம்பள்ளியைச் சோ்ந்தவா் பழனி (43), முன்னாள் ராணுவ வீரா். இவரது உறவினா் கிருஷ்ணமூா்த்தி (50). இவா்களிடையே சொத்து பிரச்னை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இந்நிலையில், கடந்த 29-ஆம் தேதி இவா்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், கிருஷ்ணமூா்த்தி தரப்பினா் பழனியை கட்டையால் தாக்கி மிரட்டல் விடுத்தனா்.

இதுகுறித்து பழனி அளித்த புகாரின்பேரில், மகாராஜகடை போலீஸாா் வழக்குப் பதிந்து கிருஷ்ணமூா்த்தி (50), அவரது மனைவி சாந்தி (40), மகன் சூா்யா (20) ஆகிய மூவரையும் கைது செய்தனா்.