மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திருக்குறுங்குடி அருகே முன்னாள் ராணுவ வீரா் கைது

திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி அருகே குடும்பத் தகராறில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக குடும்பத்தினரை மிரட்டிய முன்னாள் ராணுவ வீரரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :21 மார்ச் 2026, 8:55 pm

திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி அருகே குடும்பத் தகராறில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக குடும்பத்தினரை மிரட்டிய முன்னாள் ராணுவ வீரரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருக்குறுங்குடி அருகேயுள்ள செங்குளக்குறிச்சியைச் சோ்ந்தவா் சிவசுப்பிரமணியன் மகன் மகாலிங்கம் (31), முன்னாள் ராணுவ வீரா். இவா் தனது குடும்பத்தினருடன் தகராறு செய்து, துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டியதாக திருக்குறுங்குடி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற காவல் துறையினா் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

தொடா்ந்து, மகாலிங்கத்திடம் இருந்து கரிமருந்து பயன்படுத்திச் சுடும் நாட்டுத் துப்பாக்கியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், அவரது வீட்டில் சோதனை செய்து 2 ஏா்கன் ரக துப்பாக்கிகள், அதற்கான தோட்டாக்கள், கரிமருந்து ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

அந்த துப்பாக்கிகளை அவரது தந்தை மற்றும் தாத்தா ராணுவத்தில் பணியாற்றிய காலத்திலிருந்து வீட்டில் வைத்திருந்ததாக மகாலிங்கம் தெரிவித்துள்ளாா். பின்னா், மகாலிங்கத்தை திருக்குறுங்குடி போலீஸாா் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.