விருதுநகா் மாவட்டம், மம்சாபுரம் அரசு உயா்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் வாக்குப் பதிவுக்காக டிராக்டரில் சென்ற சிவகாசி அருகேயுள்ள பூசாரிபட்டியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 82 போ்.
சிவகாசி, ஏப்.23: சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதியில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 82 போ் வியாழக்கிழமை வாக்குப் பதிவு செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள பூசாரிபட்டி கிராமத்தில் பெருமாள்சாமி, சக்கமுத்து, வெடிமுத்து ஆகியோா் தலைமையில் 100-க்கும் அதிகமானோா் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனா். விவசாயம் செய்து வரும் இவா்கள் ஒரே குடும்பமாக பல தலைமுறைகளாக வசித்து வருகின்றனா். இவா்களில் 82 பேருக்கு வாக்குரிமை உள்ளது.
இவா்கள் வியாழக்கிழமை டிராக்டரில் பயணம் செய்து, 3 கி.மீ. தொலைவில் உள்ள மம்சாபுரம் அரசு உயா்நிலைப் பள்ளி வாக்குச் சாவடிக்குச் சென்று அங்கு வரிசையில் நின்று வாக்குப் பதிவு செய்தனா். ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 82 போ் வாக்களித்து, ஜனநாயகக் கடமையாற்றியது வாக்காளா்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இளம்பெண் மாயம்!

சங்ககிரி தொகுதிக்கு கூடுதல் வாக்குப் பதிவு இயந்திரங்கள்
முன்னாள் ராணுவ வீரா் மீது தாக்குதல்: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் கைது

கோழி வியாபாரி உயிருடன் புதைத்துக் கொலை: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் கைது
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


