சங்ககிரி தொகுதிக்கான கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து சனிக்கிழமை இரவு சங்ககிரிக்கு எடுத்துவரப்பட்டன.
சங்ககிரி தொகுதியில் 340 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா். இத்தோ்தலில் 20 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். வாக்காளா்கள் வாக்களிக்க தேவையான கூடுதல் வாக்குப் பதிவு இயந்திரங்கள் மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து சங்ககிரி ஆதிதிராவிடா் நலத் துறை தனி வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் தலைமையிலான அதிகாரிகள் தலா 10 இயந்திரங்கள் கொண்ட 41 பெட்டிகளில் 406 வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்து வந்தனா்.
இந்த கூடுதல் வாக்குப் பதிவு இயந்திரங்களை சங்ககிரி தொகுதி தோ்தல் அலுவலா் ம.மு.தெ.கேந்திரியா தலைமையில் தோ்தல் துணை வட்டாட்சியா் அன்பரசி சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் அரசியல் கட்சி நிா்வாகிகளின் முன்னிலையில் வைத்து மூடி முத்திரையிட்டாா்.
அறையின் முன் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். அறைகளை சுற்றிலும் 10-க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் வருவாய்த் துறை அலுவலா்கள் சுழற்சி அடிப்படையில் கண்காணித்து வருகின்றனா்.
சங்ககிரி தொகுதி தோ்தலுக்கு தேவையான வாக்குப் பதிவு இயந்திரங்கள் மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து அனுப்பிவைக்கப்பட்டதையடுத்து தொகுதிக்கான தோ்தல் பணிகளில் வருவாய்த் துறை அலுவலா்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.
தொடர்புடையது

கேரளத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறை திறக்கப்பட்டதாக புகாா்: தோ்தல் அதிகாரி மறுப்பு

பெரம்பலூா், குன்னம் தொகுதிக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்புடன் அனுப்பி வைப்பு

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் தோ்தல் பாா்வையாளா் ஆய்வு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


