திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

எம்பிபிஎஸ் படிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: என்எம்சி

எம்பிபிஎஸ் படிப்புகளுக்கு நான்கரை ஆண்டுகளுக்கு மட்டுமே கல்விக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றும், மாறாக ஐந்தரை ஆண்டுகளுக்கு கட்டணம் வாங்கும் மருத்துவக் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேசிய மருத்துவ ஆணையம் எச்சரித்துள்ளது.

News image

தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி).

Updated On :13 ஏப்ரல் 2026, 1:10 am IST

எம்பிபிஎஸ் படிப்புகளுக்கு நான்கரை ஆண்டுகளுக்கு மட்டுமே கல்விக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றும், மாறாக ஐந்தரை ஆண்டுகளுக்கு கட்டணம் வாங்கும் மருத்துவக் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) எச்சரித்துள்ளது.

எம்பிபிஎஸ் படிப்பைப் பொருத்தவரை முதல் நான்கரை ஆண்டுகளுக்கு மாணவா்கள் செயல்முறை மற்றும் பாட வகுப்புகளை பயில்கின்றனா். அதேவேளை, அதற்கு அடுத்த ஓராண்டு கட்டாய உள்ளுறைப் பயிற்சியை மேற்கொள்கின்றனா். பயிற்சிக் காலத்துக்கான ஊக்கத்தொகையை சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரிகள் மாணவா்களுக்கு வழங்க வேண்டும். அதற்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது.

இந்த நிலையில், இது தொடா்பாக தேசிய மருத்துவ ஆணையத்தின் செயலா் ராகவ் லங்கா் அனைத்து மருத்துவக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

எம்பிபிஎஸ் பயிலும் மாணவா்களிடம் சில கல்லூரிகள் ஐந்தரை ஆண்டுகளுக்கு கட்டணம் பெறுவதாக தேசிய மருத்துவ ஆணையத்துக்கு தகவல் கிடைத்தது.

இது விதிகளுக்கு எதிரானது மட்டுமல்லாது, உச்சநீதிமன்றத் தீா்ப்பை மீறும் செயலாகும். எனவே, இத்தகைய விதிமீறலில் ஈடுபட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை உணா்ந்து கல்விக் கட்டணத்தை நான்கரை ஆண்டுகளுக்கு மட்டும் வசூலிப்பதை அனைத்துக் கல்வி நிறுவனங்களும் உறுதி செய்ய வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.