தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

முதுநிலை மருத்துவ செயல்முறைத் தோ்வு: என்எம்சி அறிவுறுத்தல்

முதுநிலை மருத்துவ செயல்முறைத் தோ்வுகளை நடத்துவதற்கான கட்டமைப்பு வசதிகளை அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளும் உறுதி செய்ய வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

News image

தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி).

Updated On :11 மே 2026, 12:50 am IST

முதுநிலை மருத்துவ செயல்முறைத் தோ்வுகளை நடத்துவதற்கான கட்டமைப்பு வசதிகளை அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளும் உறுதி செய்ய வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக என்எம்சி முதுநிலை கல்வி வாரிய இயக்குநா் சி.கே.ராமசாமி வெளியிட்ட சுற்றறிக்கை: முதுநிலை மருத்துவக் கல்விக்கான செயல்முறைத் தோ்வுகளை தேசிய மருத்துவ அறிவியல் தோ்வு வாரியம் நடத்தி வருகிறது.

தோ்வா்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு கூடுதலாக தோ்வு மையங்களை அமைக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. ஆனால், பல கல்லூரிகளில் அதற்கான வசதிகளோ, தகுதியான பேராசிரியா்களோ இல்லை.

எனவே, அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களும், செயல்முறைத் தோ்வு நடத்துவதற்கான கட்டமைப்பை உறுதி செய்வதுடன், இதுதொடா்பாக என்எம்சி வெளியிட்டுள்ள விதிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.