கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

40 ஆண்டுகள் கழித்து பெற்ற தாயை சந்திக்கும் மகன்! நெகிழ்ச்சியான உண்மை சம்பவம்!

சென்னையில் காணாமல் போன சிறுவன் சுபாஷ் 20 ஆண்டுகள் கழித்து தாயை சந்தித்த சம்பவம் நெகிழ்ச்சியடைச் செய்தது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 12:59 pm

வனராஜன்


சென்னையில் காணாமல் போன சிறுவன் சுபாஷ் 20 ஆண்டுகள் கழித்து தாயை சந்தித்த சம்பவம் நெகிழ்ச்சியடைச் செய்தது. இதே போன்று 40 ஆண்டு காலத்திற்குப் பிறகு மகன்  நீண்ட பாசப்போராட்டம் நிகழ்த்தி தனது அம்மாவை கண்டுபிடித்துள்ளார் அடுத்த மாதம்  அவரை நேரில் சந்திப்பார். 

டென்மார்க்கை சேர்ந்தவர் டேவிட் சாந்தகுமார். அங்குள்ள வங்கி ஒன்றில் அதிகாரியாகப் பணியாற்றுகிறார். மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் டென்மார்க்கில் வசிக்கிறார். தன்னுடைய உண்மையான அம்மாவை பல ஆண்டு காலம் அலைந்து தான் கண்டுபிடித்திருக்கிறார் என்பதே  இந்தப் பாசப்போராட்டத்தின் கதை;  யார் இந்த டேவிட் சாந்தகுமார்? தஞ்சை பகுதியிலுள்ள அம்மாபேட்டைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கலியமூர்த்தி- தனலெட்சுமி தம்பதியினர். வறுமையின் காரணமாக 1979 -ஆம் ஆண்டு தங்களுடைய மகனை டென்மார்க்கில் உள்ள தம்பதிகளுக்குத் தத்து கொடுத்துவிடுகிறார்கள்.

தத்தெடுத்த தம்பதிகள் அந்த சிறுவனுக்கு டேவிட் சாந்தகுமார் என்று பெயரிட்டு வளர்த்து நல்ல நிலைக்கு ஆளாக்கினர்.  டென்மார்க்கிலுள்ள அரசுப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் ஒருவருக்கும் டேவிட்டிற்கும் திருமணம் நடைபெற்றது.  ஒரு நாள் வளர்ப்பு மகனிடம் தாங்கள் வளர்ப்பு பெற்றோர் தான். உன்னுடைய பெற்றோர் தஞ்சையில் இருக்கிறார்கள் என்ற உண்மையைச் சொல்ல தவறவில்லை. வளர்ப்பு பெற்றோர் மற்றும் மனைவியின் அனுமதி பெற்று தன்னுடைய பெற்றோரை காண ஆறு ஆண்டுகளுக்கு முன் சென்னை வந்தார் டேவிட். 

ஆண்டுதோறும் விடுமுறை நாட்களில் தமிழகம் வந்து தன்னுடைய தாயை எப்படியாவது கண்டுபிடித்து விட வேண்டும் என்ற முயற்சியில் இறங்கினார். ஆனால், அவையனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது. இறுதியாக சென்னை பல்லாவரத்தில் உள்ள தொண்டு நிறுவனம் ஒன்றின் மூலமாகத் தத்துக் கொடுத்து இருப்பது தெரியவந்தது. 

தத்து கொடுத்தவர்களின் முகவரியை கண்டறிந்து தஞ்சாவூர் அம்மாபேட்டை சென்றார். அங்கேயும் தன்னுடைய தாயை கண்டுபிடிக்க முடியாமல் ஏமாற்றமே அடைந்தார். இதனையடுத்து சட்ட உதவியை நாடினார். அப்போது தான் இன்னொரு உண்மை தெரியவந்தது. டேவிட் சாந்தகுமாருக்கு மூத்த சகோதரர் ஒருவர் இருப்பது தெரியவந்தது. அவரும் டென்மார்க்கில் வசிக்கும் வேறொரு தம்பதியினருக்கு தத்து கொடுக்கப்பட்டுள்ளார் என்ற விவரமும் தெரியவந்தது. 

அம்மாவைத்தான் கண்டுபிடிக்க முடியவில்லை எனவே அண்ணனையாவது கண்டுபிடிப்பேன் என டென்மார்க்கில் அலைந்தார். ஆனால்,  தனது தொப்புள் கொடி உறவுகளை அவ்வளவு எளிதில் டேவிட்டால் நெருங்க முடியவில்லை. தனது அம்மாவுடன் எடுத்துக் கொண்ட சிறுவயது புகைப்படத்தைச் சென்னையிலுள்ள நண்பர்களிடம் கொடுத்து தொடர்ந்து தேடுதல் வேட்டையில் இறங்கினார். அவரின் பல ஆண்டுக் காலப் பாசப்போராட்டத்திற்குத் தற்போது விடை கிடைத்திருக்கிறது. 

தனது தாயார் இளைய மகனுடன் மணலியில் வசிப்பது தெரியவந்தது. அவர்களுடைய தொலைபேசி எண்ணை வாங்கி வீடியோ காலில் தொடர்பு கொண்டு பேசினார் டேவிட் சாந்தகுமார். தனக்குத் தெரிந்த தமிழ் வார்த்தைகளில் அம்மாவிடம் நலம் விசாரித்தார். தெரிந்தே வறுமையின் காரணமாக மகன்களைத் தத்து கொடுத்ததால் அவர்களின் நினைப்பு உள்ளூர வாட்டினாலும்,  அதை வெளியே சொல்லாமல் இருந்து வந்தார் தனலெட்சுமி. 

ஆனால், தான் தத்து கொடுத்த மகனே தன்னைத் தேடி வருவான் என அவர் கனவிலும் நினைக்கவில்லை. ஆனாலும் அந்த ஆச்சரியம் நடந்தது.  தன்னைத் தேடி கண்டுபிடித்த மகனை நினைத்து நெகிழ்ச்சி அடைந்தார் தனலெட்சுமி. 

அடுத்த மாதம் இறுதியில் டென்மார்க்கில் இருந்து மனைவி இரு குழந்தைகளுடன் வந்து தனது நிஜப் பெற்றோரை நேரில் சந்திக்க உள்ளார். இந்தச் சந்திப்பிற்கான நாட்களை எண்ணிக்கொண்டு தூங்காத இரவுகளோடும், கனவுகளோடும் கழித்து வருகிறார் பாசப்பிள்ளையான டேவிட் சாந்தகுமார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.