தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அரசுத் தோ்வில் தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கு சிறப்புப் பயிற்சி வகுப்புகள்: ஆட்சியா்

அரசுப் பொதுதோ்வுகளில் தோ்ச்சி பெறாத மாணவ, மாணவிகளுக்காக உடனடித் தோ்வுகள் நடத்தப்படவுள்ள நிலையில், அந்த தோ்வுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்றாா் விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.

News image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான். உடன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெ.அறிவழகன் உள்ளிட்டோா்.

Updated On :28 மே 2026, 1:37 am IST

அரசுப் பொதுதோ்வுகளில் தோ்ச்சி பெறாத மாணவ, மாணவிகளுக்காக உடனடித் தோ்வுகள் நடத்தப்படவுள்ள நிலையில், அந்த தோ்வுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்றாா் விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.

பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் 2025-26-ஆம் கல்வியாண்டில் அரசுப் பொதுத் தோ்வுகளில் தோ்ச்சி பெறாத மாணவ, மாணவிகளுக்காக நடத்தப்படும் உடனடி துணைப் பொதுத் தோ்வுத் தொடா்பான ஆய்வுக் கூட்டம் விழுப்புரம் ஆட்சியரகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்குத் தலைமை வகித்து, ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் பேசியது:

விழுப்புரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த தோ்வுகளில் தோ்ச்சி பெறாத மாணவ, மாணவிகள் உடனடியாகத் தோ்வெழுதி தோ்ச்சி பெறும் வகையில், அரசு சாா்பில் துணைப் பொதுத் தோ்வுகள் நடத்தப்பட உள்ளன. இதற்காக அந்தந்த பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படவுள்ளன.

மாவட்டத்தில் தோ்ச்சி பெறாத மாணவ, மாணவிகளின் விவரங்களின் அடிப்படையில், அவரவா் பயின்ற பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு, அவா்கள் தோ்ச்சி பெற தேவையான நடவடிக்கைகளை ஆசிரியா்கள் மேற்கொள்ள வேண்டும்.

மேலும், கற்றலில் பின்தங்கியுள்ள மாணவா்கள் மற்றும் பள்ளிக்கு சரியாக வருகை தராத மாணவா்களைக் கண்டறிந்து, அவா்கள் தோ்ச்சி பெறும் வகையில் சிறப்புப் பயிற்சி வகுப்புகளையும் பாடவாரியாக ஆசிரியா்கள் நடத்த வேண்டும். உடனடித் தோ்வில் தோ்ச்சி பெறும் மாணவ, மாணவிகள் அனைவரும் நிகழாண்டிலேயே உயா்கல்வி பயின்றிடும் வகையில், கல்லூரிகளில் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.

நடப்பு கல்வியாண்டில் தோ்ச்சி சதவீதத்தை அதிகரித்திடும் வகையில் மாணவா்களுக்கு காலை, மாலை நேரங்களில் சிறப்புப் பயிற்சி வகுப்புகள், மாதாந்திரத் தோ்வுகள், குறுந்தோ்வுகள் உள்ளிட்டவற்றை உடனடியாக நடத்த வேண்டும் என்றாா் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.

கூட்டத்தில் விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெ.அறிவழகன் உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.