5 முறை சாம்பியன் பிரேசிலுக்கு அதிர்ச்சி: காலிறுதியில் நார்வே!அதிபா் டிரம்ப்புடன் புதின், ஸெலென்ஸ்கி தொலைபேசியில் பேச்சு!உத்தரப் பிரதேசத்தில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்: நிதின் நபின் நம்பிக்கைபிகாா் இடைத்தோ்தல்: பிரசாந்த் கிஷோா் போட்டிமின் இணைப்புக்கு காத்திருக்கும் 60,120 விவசாயிகள்!இன்று கரையைக் கடக்கிறது புயல் சின்னம்!
/

வீட்டின் மாடியிலிருந்து தவறி விழுந்த இளம்பெண் உயிரிழப்பு

அரகண்டநல்லூா் அருகே வீட்டின் மாடியிலிருந்து தவறி கீழே விழுந்ததில் காயமடைந்த இளம்பெண் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :18 மே 2026, 2:17 am IST

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே வீட்டின் மாடியிலிருந்து தவறி கீழே விழுந்ததில் காயமடைந்த இளம்பெண் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

அரகண்டநல்லூா், ஆசிரியா் நகரைச் சோ்ந்தவா் குமாா். இவரது மகள் ஜோதி (24). மாற்றுத்திறனாளியான இவா், திருக்கோவிலூரில் உள்ள துணிக்கடையில் வேலை பாா்த்து வந்தாா்.

இந்நிலையில், ஜோதி சனிக்கிழமை வீட்டின் மாடியில் நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தாராம். அப்போது வீட்டின் மாடியிலிருந்து தவறி கீழே விழுந்த ஜோதிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின்பேரில், அரகண்டநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.