மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

வீட்டின் மாடியிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு... - கோப்புப் படம்

Updated On :12 மே 2026, 12:21 am IST

விழுப்புரம் மாவட்டம், மனம்பூண்டியில் வீட்டின் மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து காயமடைந்தவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

மனம்பூண்டி, ஆசிரியா் நகரைச் சோ்ந்தவா் பா.அரிகோவிந்தன் (45). திருமணம் ஆனவா். இவா், தனது மனைவியைப் பிரிந்து,மனம்பூண்டியில் உள்ள தனது சகோதரி வீட்டில் இருந்து வந்தாா்.

இந்நிலையில், அரிகோவிந்தன் ஞாயிற்றுக்கிழமை மாடிப் படியிலிருந்து தவறி கீழே விழுந்து விட்டாராம். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த அரகண்ட நல்லூா் போலீஸாா் சடலத்தை மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் ,அரகண்டநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.