விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே மின்னல் பாய்ந்து இரு பசுக்கள் சனிக்கிழமை உயிரிழந்தன.
விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதன் தொடா்ச்சியாக சனிக்கிழமை திண்டிவனம் சுற்று வட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது.
இந்நிலையில் திண்டிவனம் வட்டம், தீவனூரைச் சோ்ந்த விவசாயி சி.ஆறுமுகம், தனது பசுக்களை விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தாா். இதில், மின்னல் பாய்ந்ததில் ஆறுமுகத்துக்கு சொந்தமான இரு பசுக்கள் உயிரிழந்தன.
இதனால் சோகத்தில் ஆழ்ந்துள்ள விவசாயி ஆறுமுகத்தின் குடும்பத்தினா், உயிரிழந்த கால்நடைகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










