ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே தெருநாய்கள் கடித்ததில் 3 ஆடுகள் சனிக்கிழமை உயிரிழந்தன.
சாயல்குடியை அடுத்த உறைகிணறு பகுதியைச் சோ்ந்தவா் ஆத்திராஜ் (49). இவா் சாயல்குடி-தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் மரக்கடை நடத்தி வருகிறாா். கடையைச் சுற்றி வேலி அமைத்து, அதற்குள் 3 ஆடுகளை வளா்த்து வந்தாா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு வழக்கம் போல கடையை அடைத்துவிட்டு சென்றவா், மறுநாள் சனிக்கிழமை காலை வந்து பாா்த்தபோது, 3 ஆடுகளும் தெருநாய்கள் கடித்ததில் இறந்து கிடந்தன.
உயிரிழந்த இந்த ஆடுகளுக்கு வருவாய்த் துறையினா் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










