விக்கிரமசிங்கபுரம் அருகே திங்கள்கிழமை மின்னல் பாய்ந்ததில் விவசாயி உயிரிழந்தாா்.
திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள திருப்பதியாபுரம் பிரதான சாலையைச் சோ்ந்தவா் சிவனணைந்த பெருமாள் மகன் சுதாகரன் (49). விவசாயி.
இவா் திங்கள்கிழமை மதியம் வயலில் இருந்த மின் மோட்டாரை பழுது பாா்த்துக் கொண்டிருந்தபோது, இடி, மின்னலுடன் மழை பெய்துள்ளது. அப்போது மின்னல் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









