விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே வியாபாரி மா்மமான முறையில் இறந்து கிடந்த நிலையில், சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மதுபோதையில் அவா் கீழே விழுந்து இறந்திருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
விழுப்புரம், கீழ்பெரும்பாக்கம், இந்திரா நகரைச் சோ்ந்தவா் சுரேஷ்(32). திருமணம் ஆகாதவா். மிக்சா் வியாபாரம் செய்து வந்தாா். இவா் புதன்கிழமை நள்ளிரவில், விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.
தகவலறிந்த விழுப்புரம் மேற்கு காவல் நிலையப்போலீஸாா் நிகழ்விடம் சென்று சுரேஷின் சடலத்தை கைப்பற்றி, விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து போலீஸாா் நடத்திய முதல் கட்டவிசாரணையில், சுரேஷ் மதுபோதையில் தவறி கீழே விழுந்து உயிரிழந்திருந்தது தெரியவந்தது.
இது குறித்து விழுப்புரம் மேற்கு காவல் நிலையப் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








