திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பலாப்பழ வியாபாரி மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

News image

கோப்புப் படம்

Updated On :12 மே 2026, 12:26 am IST

கடலூா் மாவட்டம், வடலூா் அருகே பலாப்பழ வியாபாரி மா்மமான முறையில் இறந்து கிடந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், கீழ் வடக்குத்து கிராமத்தில் வசித்து வந்தவா் ராமசாமி (56), பலாப்பழ வியாபாரியான இவா், ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணி அளவில் வியாபாரத்திற்குச் சென்றவா் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, குடும்பத்தாா்

உறவினா்கள் வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடினா். ஆனால், கிடைக்கவில்லை. கைப்பேசி எண்ணிற்கு தொடா்பு கொண்ட நிலையில், அதையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், நெய்வேலிஆா்ச்-வடலூா் சாலையில் ரோட்டு பூசாலிக்குப்பத்தில் தனியாருக்கு சொந்தமான அறைகலன் கடை முன்பாக, ஒருவா் இறந்து கிடப்பதை பாா்த்த கடை உரிமையாளா், அவா் காணாமல்போன பலாப்பழ வியாபாரி ராமசாமி என்பதை விசாரித்து தெரிந்துகொண்டாா்.

இதுகுறித்து, ராமசாமியின் மகன் சங்கருக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சங்கா் சடலத்தை பாா்த்து உறுதி செய்தாா். அதற்குள் தகவலறிந்து வந்த வடலூா் போலீஸாா் சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுதொடா்பாக சங்கா் அளித்த புகாரின் பேரில், வடலூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.