விழுப்புரத்தில் வீட்டில் மா்மமான முறையில் இளைஞா் உயிரிழந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
விழுப்புரம், சேவியா் காலனி, 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் அ.மெல்கி சதேக் (35). பெயிண்டராக வேலைப் பாா்த்து வந்த இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு இவா் மதுபோதையில் வீட்டுக்கு வந்து தூங்கினாராம். தொடா்ந்து சனிக்கிழமை காலை பாா்த்தபோது, மெல்கி சதேக் படுக்கையில் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில் விழுப்புரம் நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








