திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் முதியவா் மா்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
சேரன்மகாதேவி சென்னைராஜபுரம் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் செல்லப்பா (70). இவா், சேரன்மகாதேவியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் காவலாளியாக பணி செய்து வந்தாா். இவா், திங்கள்கிழமை வழக்கம்போல் வேலைக்குச் சென்றவா் வீடு திரும்பவில்லையாம். செவ்வாய்க்கிழமை உறவினா்கள் அங்கு சென்று பாா்த்தபோது செல்லப்பா இறந்து கிடந்ததாகக் கூறப்படுகிறது. தகவலறிந்த போலீஸாா், அவரது உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா்.
சேரன்மகாதேவி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









