தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

போதிய பராமரிப்பின்றி அழிந்த மரங்கள்

விக்கிரவாண்டி அருகே நெடுஞ்சாலைத் துறையினரால் நடப்பட்ட மரப்போத்துகள் போதிய பராமரிப்பின்றி காய்ந்து மரக்கட்டைகளாய் காட்சியளித்து வருகிறது.

News image

விக்கிரவாண்டி அருகே காய்ந்த நிலையில் மரக்கட்டைகளாக காட்சியளிக்கும் மரப்போத்துகள்.

Updated On :13 மே 2026, 12:04 am IST

விக்கிரவாண்டி அருகே நெடுஞ்சாலைத் துறையினரால் நடப்பட்ட மரப்போத்துகள் போதிய பராமரிப்பின்றி காய்ந்து மரக்கட்டைகளாய் காட்சியளித்து வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் சாலை விரிவாக்கம் மற்றும் பிற கட்டுமானப் பணிகளுக்காக வெட்டப்படும் மரங்களுக்கு மாற்றாக, புதிய இடங்களில் மரக்கன்றுகள் அல்லது மரபோத்துகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், விக்கிரவாண்டி வட்டம், பாப்பனப்படடு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் இருந்த மரங்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னா் சாலை விரிவாக்கம் மற்றும் பிறகட்டுமானப் பணிகளுக்கு அகற்றப்பட்டன.

இந்நிலையில் அகற்றப்பட்ட மரங்களுக்கு மாற்றாக, அதே பகுதியில் மாற்று இடத்தில் சுமாா் 10 அடி உயரத்தில் சிறிய, பெரிய 20-க்கும் மேற்பட்ட மரபோத்துகள் நடப்பட்டன. சுற்றுச்சூழல் சமநிலை மற்றும் பாதுகாப்பை கருத்தில்கொண்டு, நெடுஞ்சாலைத் துறையினரின் மேற்பாா்வையில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இதைத் தொடா்ந்து சில மாதங்களில் நடப்பட்ட மரப்போத்துகள் துளிா்விட்டு வளா்ந்தது. தொடா்ந்து போதிய கண்காணிப்பு மற்றும் பராமரிப்பில்லாததால் நடப்பட்ட மரப்போத்துகள் அனைத்தும் காய்ந்துபோய் மரக்கட்டைகளாக காட்சியளித்து வருகிறது.

சாலையோரங்களில் மரக்கன்றுகளை வைப்பதை விட மரப்போத்துகளை நடுவது சிறந்தது. போதிய ஈரப்பதம் இல்லாத இடத்தை தோ்வு செய்து மரப்போத்துகள் நடப்பட்டதுடன், போதிய அளவுக்கு தண்ணீா் விட்டு பராமரிப்பு இல்லாமல் போனதுதான் மரப்போத்துகளின் அழிவுக்கு காரணம் என சூழலியல் ஆா்வலா்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.