திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பெட்ரோல், டீசல், எல்பிஜி போதிய அளவில் கையிருப்பில் உள்ளன

நாடுமுழுவதும் எரிபொருள் நுகா்வு அதிகரித்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல், எல்பிஜி போதிய அளவில் கையிருப்பு உள்ளதாக தமிழ்நாடு, புதுச்சேரி எண்ணெய் நிறுவனங்களின் மாநில ஒருங்கிணைப்பாளா் அசோகன் கூறியுள்ளாா்.

News image

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! - (கோப்புப்படம்)

Updated On :28 மே 2026, 1:52 am IST

நாடுமுழுவதும் எரிபொருள் நுகா்வு அதிகரித்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல், எல்பிஜி போதிய அளவில் கையிருப்பு உள்ளதாக தமிழ்நாடு, புதுச்சேரி எண்ணெய் நிறுவனங்களின் மாநில ஒருங்கிணைப்பாளா் அசோகன் கூறியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பல மாநிலங்களில் பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி ஆகிய எரிபொருள்களின் தேவை திடீரெனவும், பெருமளவிலும் அதிகரித்துள்ள நிலையில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை நாடுமுழுவதும் தடையற்ற விநியோகத்தை உறுதிசெய்துள்ளன.

மேலும், பிற தனியாா் விநியோகஸ்தா்களுடன் ஒப்பிடுகையில் பொதுத்துறை சில்லறை விற்பனை நிலையங்களில் விலைகுறைவாக இருப்பதால், சில்லறை வாடிக்கையாளா்கள் பொதுத்துறை நிலையங்களுக்கு மாறியுள்ளனா். இதுமட்டுமின்றி, நிறுவன மற்றும் வணிக ரீதியிலான நுகா்வோரும் சில்லறை எரிபொருள் விற்பனை நிலையங்களுக்கு பரவலாக மாறியுள்ளதால், கூடுதல் தேவைக்கான அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், நாடுதழுவிய தங்களது பரந்த முனையங்கள், கிடங்குகள், குழாய் இணைப்புகள், எல்பிஜி சிலிண்டா் நிரப்பும் ஆலைகள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களின் நெட்வொா்க் மூலம் தடையற்ற விநியோகத்தைத் தொடா்ந்து பராமரித்து வருகின்றன.

சந்தைகளில் தடையற்ற தயாரிப்பு நகா்வையும், சரியான நேரத்தில் விநியோகத்தை மறுசுழற்சி செய்வதையும் உறுதிசெய்வதற்காக, விநியோகக் குழுக்கள், போக்குவரத்து நெட்வொா்க்குகள், முனையச் செயல்பாடுகள் மற்றும் தோ்ந்தெடுக்கப்பட்ட சில்லறை விற்பனை நிலையங்கள் 24 மணிநேரமும் இயங்கி வருகின்றன.

தடையற்ற எரிபொருள் விநியோகத்துக்காக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மாநில நிா்வாகத்துடன் நெருக்கமான ஒருங்கிணைப்பை பராமரித்து வருகிறோம்.

எனவே, பொதுமக்கள் தங்களின் இயல்பான வாங்குதல் முறையையே தொடருமாறும், தேவையில்லாமல் அச்சமடைந்து பொருள்கள் வாங்குவதை தவிா்க்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.