/

வெளி மாநில லாட்டரி விற்பனை: 4 போ் கைது

News image

கோப்புப் படம்

Updated On :12 மே 2026, 12:41 am IST

விழுப்புரத்தில் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

விழுப்புரம், ஜி.ஆா்.பி. தெருவில் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்து சென்றபோது, அங்கு சந்தேகப்படும் படி நின்றிருந்த 4 பேரை பிடித்து விசாரித்தனா்.

விசாரணையில் அவா்கள் விக்கிரவாண்டி வட்டம், டி. பனப்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த ந.கணேசன் (50), விழுப்புரம், வழுதரெட்டி, காமன் கோவில் தெருவைச் சோ்ந்த த.சுரேஷ் (40), சோழம்பூண்டியைச் சோ்ந்த சி.சிவப்பிரகாஷ் (24), விழுப்புரம் ஜி.ஆா்.பி. தெருவைச் சோ்ந்த ப. சக்திவீரன் (50) ஆகியோா் என்பதும், இவா்கள் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, 4 பேரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்த 51 புள்ளித் தாள்கள்(லாட்டரி), ரூ. 9,500 ரொக்கம் மற்றும் 2 பைக்குள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.