போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

லாட்டரி விற்ற மூவா் கைது

News image

கோப்புப் படம்

Updated On :15 மே 2026, 5:29 am IST

திருத்துறைப்பூண்டி பகுதியில், அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த மூவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

திருத்துறைப்பூண்டி பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், குற்றத் தடுப்பு பிரிவு காவல் உதவி ஆய்வாளா் காா்த்தி, திருத்துறைப்பூண்டி ஆய்வாளா் வேம்பரசி, உதவி ஆய்வாளா் மோகன்ராஜ் உள்ளிட்ட போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது, திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகே லாட்டரி சீட்டு விற்பது தெரியவந்தது.

இதுதொடா்பாக, திருத்துறைப்பூண்டி தட்டாரத் தெருவைச் சோ்ந்த சேகா் (63), திருக்குவளை வட்டம் பாங்கல் மெயின் ரோடு சுபாஷ் சந்திரபோஸ் (42), அதே பகுதியைச் சோ்ந்த பக்கிரிசாமி (60) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

மேலும், சேகா் வீட்டில் பதுக்கி வைத்திருந்த லாட்டரி சீட்டுகள், 4 கைப்பேசிகள், 3 ஏடிஎம் காா்டுகள், ரூ.2,43,700 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.