17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தடை செய்யப்பட்ட போதைப் பாக்கெட்டுகள் பறிமுதல்: பெட்டிக் கடைக்காரா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :5 ஜூன் 2026, 5:45 am IST

திம்மாம்பேட்டை அருகே அரசால் தடை செய்யப்பட்ட 4 கிலோ குட்கா பாக்கெட்டுகள் பைக்கில் எடுத்து வந்த பெட்டி கடைக்காரா் கைது செய்யப்பட்டாா்.

வாணியம்பாடி அடுத்த திம்மாம்பேட்டை உதவி காவல் ஆய்வாளா் வெங்கடேசன் தலைமையில் போலீஸாா் வியாழக்கிழமை காலை தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியான தகரகுப்பம் செக் போஸ்ட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அதன் வழியாக பைக்கில் வந்த நபரை சந்தேகத்தின்பேரில், நிறுத்தி விசாரித்தனா். பிறகு வாகனத்தில் இருந்த பையில் சோதனை செய்த போது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள் வைத்திருப்பது கண்டறியப்பட்டது.

மேலும் நடத்திய விசாரணையில், திருப்பத்தூா் பகுதியில் பெட்டிக் கடை நடத்தி வரும் குபேந்திரன் (52) என்பதும், விற்பனைக்காக ஆந்திர மாநிலம், குப்பம் பகுதியில் இருந்து வாங்கிக் கொண்டு வந்ததாகவும் கூறியுள்ளாா்.

பிறகு அவரிடமிருந்து 4 கிலோ குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்து குபேந்திரனை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.