தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

66 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல்

மதுரை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின்போது அரசால் தடை செய்யப்பட்ட 66 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல்

News image

குட்கா பொருள்கள் - பிரதிப் படம்

Updated On :20 மே 2026, 1:30 am IST

மதுரை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின்போது அரசால் தடை செய்யப்பட்ட 66 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது என மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா பொருள்கள், புகையிலைப் பொருள்களின் விற்பனையைத் தடுக்கும் நோக்கில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவா்கள், காவல் துறையினா் மே 11- ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை தீவிர சோதனை மேற்கொண்டனா். 2,106 கடைகளை ஆய்வு செய்ததில், 11 கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், குட்கா வகைகள் விற்பனையில் இருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, அந்தக் கடைகளில் இருந்த ரூ. 68 ஆயிரம் மதிப்பிலான 66.27 கிலோ குட்கா, புகையிலைப் பொருள்களை அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.

சட்ட விரோதமாக குட்கா பொருள்களை விற்பனை செய்த குற்றத்தின் கீழ் 9 கடைகள் மூடப்பட்டன. முதல் முறையாக விதி மீறலில் ஈடுபட்ட 7 கடைகளுக்கு ரூ. 1.75 லட்சமும், இரண்டாவது முறையாக வீதி மீறலில் ஈடுபட்ட 4 கடைகளுக்கு ரூ. 2 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டு, மொத்தம் ரூ. 3.75 லட்சம் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் குட்கா, புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மாவட்டத்தில் எங்கேனும் குட்கா, புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டால் அதுகுறித்து பொதுமக்கள் உணவுப் பாதுகாப்புத் துறை அல்லது காவல் துறைக்குத் தகவல் அளித்து ஒத்துழைக்க வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.