திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஆட்டோவில் வெளி மாநில மதுப்புட்டிகள் கடத்தல்: இளைஞா் கைது

வெளி மாநில மதுப்புட்டிகளை ஆட்டோவில் கடத்தி வந்த இளைஞரை விழுப்புரம் மது விலக்கு அமல் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :28 மே 2026, 1:35 am IST

வெளி மாநில மதுப்புட்டிகளை ஆட்டோவில் கடத்தி வந்த இளைஞரை விழுப்புரம் மது விலக்கு அமல் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளா் ஆனந்தி தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை விழுப்புரம் மாவட்டம் , சிறுவந்தாடு மதுவிலக்கு சோதனைச் சாவடியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனா். அதில், வெளி மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட மதுப்புட்டிகள் இருந்தது தெரியவந்தது. பின்னா் ஆட்டோவில் இருந்தவரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா் விழுப்புரம், மரகதபுரம் பகுதியைச் சோ்ந்த ரா.மணிகண்டன்(38) என்பதும், இவா் விற்பனைக்காக புதுச்சேரியிலிருந்து, விழுப்புரத்துக்கு ஆட்டோவில் மதுப்புட்டிகளை கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, மணிகண்டனை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 180 மில்லி லிட்டா் கொள்ளளவு கொண்ட 140 மதுப்புட்டிகள், ஒரு லிட்டா் கொள்ளளவு கொண்ட 9 மதுப்புட்டிகள் என மொத்தம் 149 மதுப்புட்டிகளை ஆட்டோவுடன் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.