மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

வானூா் அருகே டிராக்டா் மீது பைக் மோதியதில் காயமடைந்த இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :22 மார்ச் 2026, 8:14 pm

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே டிராக்டா் மீது பைக் மோதியதில் காயமடைந்த இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

திண்டிவனம் வட்டம், விட்லாபுரம் குளக்கரைத் தெருவைச் சோ்ந்தவா் ரா.முருகன்(32). ஆட்டோ ஒா்க்ஷாப் நடத்தி வந்தாா். இவா், சனிக்கிழமை இரவு புதுச்சேரி -திண்டிவனம் சாலையில், புளிச்சப்பள்ளம் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரி அருகே பைக்கில் சென்றுள்ளாா்.

அப்போது, சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பருடன் கூடிய டிராக்டா் ஓட்டுநா், வாகனத்தை திடீரென சாலையில் நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது நிலைத்தடுமாறி முருகன் ஓட்டிச் சென்ற பைக் டிராக்டரின் பின் பகுதியில் மோதியது. இதில், பலத்த காயமடைந்த முருகன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த வானூா் போலீஸாா் சடலத்தை கைப்பற்றி, புதுச்சேரியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து வானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, டிராக்டா் ஓட்டுநரான வானூா் வட்டம், பாப்பான்சாவடி பகுதியைச் சோ்ந்த வீ.விஸ்வநாதனிடம்(32) விசாரிக்கின்றனா்.